Friday, October 16, 2009

மேற்கத்திய இசையில் அப்பர், மாணிக்க வாசகர் மற்றும் குதம்பை சித்தர்

First of all I wish one and all a very happy Deepavali. In this blog I'm going to share my experience with a song composition from the movie 'AVAR'.

இயக்குனர் செல்வக்குமார் எனக்கு ஒரு சேலஞ்சிங் சிச்சுவேஷனை கூறினார். நாயகனை நினைத்து நாயகி பாடும் இளைமை துள்ளலான பாட்டு. ஆனால் பாடல் முழுவதும் நாயனும், நாயகியும் ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள். அதாவது ஜாகிங் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதைக் கேட்டவுடனேயே மனதில் தோன்றிய டியுன், நெஞ்சத்ததை கிள்ளாதே ”பருவமே . . . புதிய பாடல் பாடு”. இளையராஜாவின் மாஸ்டர் கம்போசிஷன். தமிழ் சினிமாவில் அதற்குப் பின் ஜாகிங் செய்து கொண்டிருப்பது போல எந்தப் பாடலும் வந்ததில்லை என்று நினைக்கிறேன். எனவே அந்த டியுனின் ஞாபகமே எவருக்கும் வந்து விடக்கூடாது என்று புதிய கோணத்தில் யோசித்தேன்.

பல டியுன்களை யோசிக்கும் போது, சில வருடங்களுக்கு முன் நான் கம்போஸ் செய்த ஒரு டியுன் தற்செயலாக ஞாபகம் வந்தது. உடனே அதை ஒரு Backgroud Patternஆக வைத்துக் கொண்டு புதிதாக ஒரு டியுனை உருவாக்கினேன். கேட்டவுடன் இயக்குனருக்கும் பிடித்துவிட்டது. பாடல் வரிகளை எழுதும்போது தான் நாங்களே எதிர்பார்க்காத ஒரு அற்புதம் நடந்தது.

எல்லா பாடல்களுக்குமே இயக்குனர் செல்வக்குமார் “டம்மி லிரிக்ஸ்” எழுதுவார். இந்தப் பாடலுக்கும் அவர் அப்படி முயற்சி செய்தபோது, தற்செயலாக மாணிக்கவாசகரின் பாடல் வரிகளை நெட்டில் படித்தாராம். அந்தப் பாடல்களை அவர் எனக்கு காண்பித்தார். என்ன அதிசயம்? அந்த வரிகள் அப்படியே என்னுடைய டியுனில் அமர்ந்து கொண்டது.

முன்னம் அவனுடை நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடை ஆருர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே . . .
பிச்சியானாள்!
- மாணிக்க வாசகர்

We used the above lines as Charanam in this love song. It's an uncoventional tune, with no seperate Pallavis. So when we were looking for more such lines, Mr. Selvakkumar came with another beauty.

செங்கயற் கண் பனி ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆட
சித்தம் சிவனுடன் ஆட ஆட
ஆடப் பொற்சுண்ணம் . . .
இடித்தும் நாமே!
- அப்பர்

Suddenly few lines from 'Thiruvasagam' by Appar mentioned above, synchronised with the same meter of the tune. We were thrilled and looked for more such old songs. Selvakkumar continued his search in the Internet and came with the lines of Kudambi Chithar.

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி – குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி?

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி?

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி – குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி?

- குதம்பை சித்தர்.

What a beauty I composed a tune in pure western style. But for the song the lyrics are from legendery 'Appar', 'Manika Vachagar' and 'Kudambai Chithar'. The entire team was really thrilled and till now it is our favourite song from the 'AVAR'.

You must be wondering why I am writing this now. This morning I watched Deepavali special Pattimandram in Sun TV. At the end of the show, Solomon Papayya mentioned the lines of Manika Vachagar and explained the meaning of theose 1000 year old lines.

அதை கேட்கும்போது நான் நெகிழ்ந்து விட்டேன். என்னுடைய இசைக்கு மாணிக்க வாசகர், அப்பர், குதம்பை சித்தர் இவங்களோட வரிகள் பொருந்திப் போனதே எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். இன்று அதே வரிகளை சாலமன் பாப்பையா அவர்கள் சன் டிவி பட்டி மன்றத்தில் உச்சரித்தபோது எனக்கு சந்தோஷம் இரட்டிப்பாகி விட்டது. சீக்கிரமே பாடல்கள் வெளியாகும். அப்போது “குதம்பாய்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை நீங்களும் நிச்சயம் நன்றாக இரசிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

Monday, October 5, 2009

ஐந்து ஸ்வரங்களில் லலிதம் . . . சுதர்ஸனம்

எனது நண்பர் செல்வக்குமார் ஒரு பிளாக் எழுதியிருந்தார். மிகவும் சுவாரசியமான பிளாக். மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டுமே வைத்து உருவான பாடல்களைப் பற்றிய பிளாக் அது. அதைப் படித்தவுடன் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் ஷேர் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காகத்தான் இந்த பிளாக்.

The origin of Indian Music was from "Sama Vedha". சாமவேதம் ஐந்தே ஐந்து ஸ்வரங்களை மட்டுமே கொண்டது.
ரி..க..ரி..ஸ...நி...த
நி..த..நி..ஸ...ரி..க...ரி

நான் தற்போது ”அவர்” என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கின்றேன். இயக்குனரும் என் நண்பருமான செல்வக்குமார் ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற இரு வார்த்தைகளைக் கொடுத்து இசையமைக்கச் சொன்னார். மேற்கத்திய பாணியில் அமைந்த அந்த பாடலில் இந்த வரிகளுக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு Divine Feel வேண்டுமெனக் கேட்டார். எனக்கு உடனே மனதில் சாமவேதம் தான் தோன்றியது. எனவே அந்த இரு சாமவேதம் மெட்டிலேயே இசையமைத்தேன்.




விரைவில் ”அவர்” பாடல்கள் வெளியாகும். கேளுங்கள்.

Sunday, October 4, 2009

அதிஷா அவர்களின் தவறான அவசர குற்றச்சாட்டு

இன்று athishaonline.comல் ஒரு சர்ச்சையை படித்தேன். அதிஷா அவர்கள் ஏ.ஆர்.இரகுமானின் ”ஜெய்ஹோ” பாடலும், எம்.எஸ்.வியின் ”அழகுக்கும் மலருக்கும்” பாடலும் ஒரே டியுன் என்று எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் அது அட்டைக்காப்பி என்று சாடியுள்ளார்.

நான் திரு.அதிஷா அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் ”நீங்கள் எழுதியுள்ளது முற்றிலும் தவறு”. நான் ஒரு இசை கலைஞன். அதனால் உங்களை விட என்னால் அந்த இரு பாடல்களையும் கம்பேர் செய்ய முடியும். நான் நிச்சயமாக சொல்கிறேன், இரண்டும் வெவ்வேறு டியுன்கள்.

அதிஷா அவர்களே நீங்கள் நல்ல இரசிகராக இருக்கலாம். ஆனால் இசையின் நுணுக்கம் என்பதும், இரசிப்புத் தன்மை என்பதும் வேறு வேறு. இசையின் நுணுக்கத்தை முழுவதும் அறியாமல் நீங்கள் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். இரகுமானின் ஜெய்ஹோ பாடலை தரக்குறைவாக விமர்சித்து இருக்கின்றீர்கள்.

முதல் வரி தவிர மற்ற அனைத்தும் சம்பந்தமே இல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன. அது மட்டுமில்லாமல் Orchestration என்ற சமாச்சாரம் இருக்கிறது சார், அதை கவனியுங்க சார். இந்த மாதிரி அரை ஆவர்த்தனத்தை கொண்டு கம்பேர் செய்ய ஆரம்பித்தால் பாகவதர் காலத்திலிருந்து எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமானின் இன்றைய காலம் வரை எல்லா பாடல்களுமே ஏதாவது ஒரு பாடலைப்போல இருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

எனவே அரை மெஷர், ஒரு மெஷரை வைத்துக் கொண்டு காப்பி என்று தயவு செய்து சொல்லாதீர்கள். நான் இரண்டு பாடலுக்கும் நோட்ஸ் எழுதித்தருகிறேன். உங்களுக்குத் தெரிந்த இசைக்கலைஞரை வைத்து கம்பேர் செய்து கொள்ளுங்கள்.

பின்குறிப்பு
ஒரு இசையமைப்பாளன் என்ற முறையில், எனக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, இரகுமான் என்று எந்த வேறுபாடும் கிடையாது. அனைத்து இசையும் இரசிப்பவன். அதனால் நான் ஏ.ஆர்.இரகுமானுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் தவறை சுட்டிக்காட்ட இதை எழுதியுள்ளேன். அவ்வளவுதான்.