Sunday, February 28, 2010

சுஜாதாவின் கவிதைக்கு ஒரு இசை

இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது நண்பர் இயக்குனர் செல்வக்குமார் என்னை போனில் அழைத்தார். நாளை சுஜாதாவின் நினைவுநாள், எனவே அவர் எழுதிய ஒரு கவிதையை இசை அமைக்கலாமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தேன். வழக்கம் போல மிக அவரசம் என்று சுஜாதாவின் கவிதையை ஒரு பிரண்ட் எடுத்து தந்தார். வாசிக்கும் போதே மனதில் ஒரு டியுன் தோன்றியது. அதை பாடிக் காட்டியவுடன் இரவே ரெக்கார்டிங் என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறிச் செல்லும்போது யாரோ யாரையே வா என்று அழைத்தது போல இருந்தது. அதைக் கேட்டவுடன் மனதில் வேறு ஒரு டியுன் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த டியுனையே இசையாக்கி கம்ப்யுட்டரில் ஏற்றினேன்.

டிராக் ரெடி என்ற என்னுடைய போன் காலைக் கேட்டவுடன், செல்வக்குமார் ஒரு பென் டிரைவுடன் வந்தார். இதில் சுஜாதா கவிதைகளைப் பற்றி இணைய நண்பர்கள் பேசிய சில குரல்கள் இருக்கிறது, அதை டியுனில் இணைக்க வேண்டும் என்றார். பிறகு இருவரும் கிட்டத்தட்ட லைவ்வாக பாடலின் இடையில் எங்கள் உரையாடல்களை பதிவு செய்தோம். பிறகு பென் டிரைவில் வந்திருந்த குரல்களை வெட்டி, தேவையான இடத்தில் ஒட்டினோம்.

குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பாடல் என்பதால், ஒரு குழந்தையின் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது. அதனால் காலையில் ஓ.கே செய்து தருகிறேன் என்று இயக்குனரை அனுப்பிவிட்டு என் மகள் தன்யஸ்ரீயை அழைத்து பாட வைத்தேன். எந்த டிஜிட்டல் மேஜிக்கும் இல்லாமல் வெறும் 8 டிராக்குளில் லேயர் செய்த அந்தப் பாடலை இப்போது நீங்கள் கேட்கலாம். பாடலை பாடியிருப்பது நான், இடையிடையே நானும் இயக்குனரும் பேசியிருக்கிறோம். மற்ற குரல்கள் இணைய தள நண்பர்கள் ஜமால் மற்றும் சுந்தரவதனம். எப்படி இருக்கிறது என்று கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

பாடலை உருவாக்க மொத்தமே 4 மணி நேரம்தான் ஆனது என்பது ஸ்பெஷல் செய்தி.



பாடலை இந்த லிங்கை கிளிக்செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.